அதில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இந்தியாவில் விஷயங்கள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன என்பதைக் குழந்தைகளுக்கு விளக்குவது மிகவும் கடினமான பகுதியாகும். சில சமயங்களில் நான் ஒரு பெற்றோராகத் தோல்வியடைந்துவிட்டேனா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
மற்றொருவர், பிரதமர் மோடி விரைவில் உங்கள் மகளைச் சந்திப்பார். அவளுடைய ஆசை நிறைவேறும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிலர் சிறுமியின் செயலை பாராட்டுவதாகக் கூறியுள்ளனர்.
மற்றொரு பயனர், “நம்பிக்கை ஒரு நல்ல விஷயம். ஆனால் நல்லாட்சிக்கான நம்பிக்கையை வைத்திருப்பது உங்கள் கையில் மணலை வைத்திருப்பது போன்றது. பாஜக, காங்கிரஸுக்கு நன்றி என்று எழுதியுள்ளார்.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் மோசமடைந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கக் கூடுதலாக மெட்ரோ, மேம்பாலங்கள் உள்ளிட்டவை மேற்கொண்டு வந்தாலும் பெங்களூர் போக்குவரத்து நெரிலுக்கு இதுவரை தீர்வுகாணப்படவில்லை என்றே சொல்லலாம்.

