சிங்கப்பூரில் சில்லறை வர்த்தக ஊழியர்களுக்கு சம்பளம் உயர உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
படிப்படியாக உயரும் சம்பள முறையின்கீழ் (PWM), சுமார் 53,000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இதில் பயன் பெறுவார்கள்.
சில்லறை வர்த்தக முத்தரப்பு குழுமம் (TCR) பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதை அடுத்து, 2025 முதல் 2027 வரையிலான மூன்று ஆண்டுகள் படிப்படியாக சம்பளம் உயரும் என கூறப்பட்டுள்ளது.
முழுநேர மற்றும் பகுதிநேர சில்லறை வர்த்தக ஊழியர்களுக்கு இது பொருந்தும்.
அடிப்படை மாத ஊதியம் உயர்வு
புதிய பரிந்துரையின்கீழ், ஆரம்ப நிலை சம்பளமாக சில்லறை வர்த்தக ஊழியர்கள் குறைந்தபட்சம் மொத்தம் S$2,305 வெள்ளியை பெறுவார்கள்.
வரும் செப்டம்பர் 1 முதல் இது நடப்புக்கு வரும். இது தற்போதுள்ள சம்பளமாக S$2,175 வெள்ளியை விட அதிகம்.
மேலும் 2025 முதல் 2027ஆம் ஆண்டு வரை, அடிப்படை மாதாந்திர மொத்த சம்பளம் S$2,305 இலிருந்து S$2,565 ஆக அதிகரிக்கும்.
அதாவது ஊழியர்கள், அடுத்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு ஆண்டு சம்பள உயர்வு S$160 வரை எதிர்பார்க்கலாம்.

வாரத்திற்கு 35 மணி நேரத்திற்கும் குறைவாக வேலை செய்யும் பகுதிநேர (Part-time) ஊழியர்கள் ஒரு மணிநேர ஒட்டுமொத்த சம்பளம் (Hourly Gross Wage) பெற தகுதியானவர்கள்.
அதாவது அடுத்த மாதத்தில் இருந்து ஒட்டுமொத்த சம்பளம் ஒரு மணி நேரத்துக்கு 6 சதவீதம் அதிகரிக்கும்.
இது சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தவாசிகளுக்கு மட்டும் பொருந்தும்.
Photo: Anantachai Saothong/Unsplash
The post சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்வு: சிங்கப்பூர், PR சம்பளம் எவ்வளவு? appeared first on Tamil Daily Singapore.
