Last Updated:
விரைவில் அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரர் ஒருவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவியது. இதனால் இந்த வீரரின் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இந்திய அணிக்காக அந்த வீரர் மொத்தம் 68 சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அவருக்கு வாய்ப்புகள் பலமுறை வந்த போதிலும் அவர் தன்னை நிரூபிக்கத் தவறியதால் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வாளர்கள் அவரை அணியிலிருந்து நீக்கிவிட்டனர். அந்த கிரிக்கெட் வீரருடைய பெயர் மனிஷ் பாண்டே.
இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட அணிகளுக்கு அவர் விளையாடி இருக்கிறார். சர்வதேசப் போட்டிகளில் அவர் திறமையை நிரூபிக்க அவருக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்ட நிலையில், எதிர்பார்த்த திறமையை அவர் வெளிப்படுத்தாத நிலையில் தற்போது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
மனிஷ் பாண்டே தான் வளர்ந்து வந்த காலகட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால நட்சத்திரமாக மாறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் தற்போது அவருக்கு சர்வதேசப் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை என்று கூறப்படுகிறது. 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக நடந்த தனது அறிமுகப் போட்டியில் மனிஷ் பாண்டே 86 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து கவனம் பெற்றார்.
அடுத்த ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 81 பந்துகளை எதிர்கொண்ட அவர் 104 ரன்கள் எடுத்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். இருப்பினும் அடுத்தடுத்த ஆட்டங்களில் அவரால் சிறப்பான திறமையை வெளிப்படுத்த முடியவில்லை.
அடுத்தடுத்து இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் இவற்றில் எந்த போட்டித் தொடருக்கும் மனிஷ் பாண்டே தேர்வு செய்யப்படாத நிலையே காணப்படுகிறது.
August 10, 2025 3:22 PM IST


