Last Updated:
ஜப்பானில் அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 80வது ஆண்டு நிறைவுவிழாவில் ஏராளானோர் பங்கேற்றனர்.
அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் 80 ஆண்டு நிறைவையொட்டி, ஜப்பானின் நாகசாகியில் நடைபெற்ற நினைவு நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இரண்டாம் உலகப் போரின்போது, ஜப்பானின் ஹிரோஷிமா நகர் மீது 1945 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6 ஆம் தேதி அமெரிக்கா அணுகுண்டு வீசியது. இதற்கு மூன்று நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 9 ஆம் தேதி நாகசாகி நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 70 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.
நாகசாகி மீது தாக்குதல் நடத்தியதன் நினைவு தினம், சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, நாகசாகி அமைதி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் உள்ளிட்ட 2 ஆயிரத்து 600 பேர் கலந்துகொண்டனர். மேலும் தாக்குதல் நடத்தப்பட்ட காலை 11.02 மணிக்கு மணிஓசை ஒலித்ததும், இரண்டு நிமிடங்களுக்கு மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து அமைதியின் அடையாளமாக 10-க்கும் மேற்பட்ட புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
August 09, 2025 3:44 PM IST
நாகசாகி அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்… 90 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பு!


