பெண்கள் தங்களின் சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் நாளாக ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் அதிகமானவர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாக இருப்பது ரக்ஷா பந்தன் ஆகும்.
சகோதர உறவை போற்றும் இந்த பண்டிகை வட மாநிலங்களில் மிக முக்கியமான பண்டிகையாக கொண்டாடப்படுவது வழக்கம். பெண்கள் தங்களின் சகோதரர்கள் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்தும் நாளாக ரக்ஷா பந்தன் அன்று, தங்களின் சகோதரர்களின் கைகளில் ராக்கி கட்டுகிறார்கள். அதே போல் எப்போதும் அவளுக்கு துணையாக தான் உடன் இருப்பேன் என்பதை உறுதி அளிக்கும் வகையில் சகோதரர்களும் தங்களின் சகோதரிகளுக்கு புதிய ஆடைகள், பரிசுப் பொருட்கள் வாங்கிக் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்கள்
.அண்ணன், தங்கை உறவின் உன்னதத்தை போற்றும் இந்த நாளில் ஒருவருக்கு ஒருவர் வைத்திருக்கும் பாசத்தை வெளிக்காட்டி, அதை பலப்படுத்தும் பண்டிகையாக ரக்ஷா பந்தன் உள்ளது. வருடம் முழுவதும் எதிரிகளை போல் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் அண்ணன்-தங்கை கூட இந்த நாளில் பெற்றோர்களை போல் அரவணைத்து, மன கசப்புகளை மறந்து, பாசத்தை வெளிப்படுத்தி, ஆதரவை பகிர்ந்து கொள்வார்கள். அதனால் இது மகிழ்ச்சியாக, உற்சாகமாக கொண்டாடப்படும் பண்டிகையாக உள்ளது. ஆன்மீகத்தில் கிருஷ்ணன்-சுபத்திரை, பெருமாள்-பார்வதி ஆகியோர் சகோதர உறவின் பாசத்தை வெளிப்படுத்தும் உறவுகளாக காட்டப்படுகிறது.
இந்த நாளில் திருமணமான பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் அதிகாலையில் எழுந்து தனது சகோதருக்கு விருப்பமான விதவிதமான உணவுகளை சமைப்பார்கள். சகோதர்களின் மனதை மகிழ்விப்பதற்காக இந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது. பாரம்பரிய உடையணிந்து, சிலர் முதலில் லட்டு கிருஷ்ணனுக்கு ராக்கி கட்டி வழிபடுவார்கள். அதிகாலை முதல், தனது சகோதரர்களின் நலனுக்காக விரதம் இருந்து, சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவார்கள்.
பிறகு அவர்களுக்கு குங்குமம் வைத்து, இனிப்புகள் வழங்குவார்கள். சகோதரரின் வலது மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களுக்கு குங்கும திலகம் இட்டு, அவர்கள் தலையில் அக்ஷதை தூவி அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.இந்த நாளில் திருமணமான பெண்களும், திருமணம் ஆகாத பெண்களும் அதிகாலையில் எழுந்து தனது சகோதருக்கு விருப்பமான விதவிதமான உணவுகளை சமைப்பார்கள். சகோதர்களின் மனதை மகிழ்விப்பதற்காக இந்த சடங்குகள் மேற்கொள்ளப்படுகிறது.
பாரம்பரிய உடையணிந்து, சிலர் முதலில் லட்டு கிருஷ்ணனுக்கு ராக்கி கட்டி வழிபடுவார்கள். அதிகாலை முதல், தனது சகோதரர்களின் நலனுக்காக விரதம் இருந்து, சகோதரர்களுக்கு ராக்கி கட்டுவார்கள். பிறகு அவர்களுக்கு குங்குமம் வைத்து, இனிப்புகள் வழங்குவார்கள். சகோதரரின் வலது மணிக்கட்டில் ராக்கி கட்டி, அவர்களுக்கு குங்கும திலகம் இட்டு, அவர்கள் தலையில் அக்ஷதை தூவி அவர்களின் நீண்ட ஆயுளுக்காக பிரார்த்தனை செய்வார்கள்.இந்த ஆண்டு ஆகஸ்ட் 09ம் தேதி ரக்ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த ராக்கி கட்டி, சகோதர்களுக்கு பரிசு வழங்கி, அன்பை பகிர்ந்தால் சகோதர உறவும், அவர்களின் அன்பும் நிலையாக, உறுதியாக இருக்கும் என்பது நம்பிக்கை.




