Last Updated:
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதிப்பதை எதிர்த்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை வழங்குவோம் என பதிலளித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி, “எங்களுக்கு நமது விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை வழங்குவோம். அதற்காக அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கும் நான் தயாராக இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பசுமைப் புரட்சிக்கு வித்திட்ட சுவாமிநாதனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘சுவாமிநாதன் நூறாவது சர்வதேச மாநாடு’ நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியாவை பொறுத்தவரை, இந்திய விவசாயிகளின் நலனுக்கே முன்னுரிமை. விவசாயிகள் நலனை பாதுகாக்க நான் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். அதற்கு தயாராக இருக்கிறேன்.
விவசாயிகள், மீனவர்கள் உள்ளிட்டோரின் நலன்களை விட்டுக் கொடுக்க மாட்டோம். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியாவில் அனுமதியில்லை” என பேசியுள்ளார்.
இந்திய பொருட்களுக்கு 50 சதவிகிதம் வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அறிவித்தார். இதற்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத் துறை, “இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்தது.
வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்; “பல்வேறு நாடுகளும் தங்கள் சொந்த தேசிய நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. அமெரிக்கா, இந்தியாவின் மீது கூடுதல் வரிகளை விதிக்கத் தேர்ந்தெடுத்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த நடவடிக்கைகள் நியாயமற்றவை என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்.
#WATCH | Delhi: Prime Minister Narendra Modi says, “For us, the interest of our farmers is our top priority. India will never compromise on the interests of farmers, fishermen and dairy farmers. I know personally, I will have to pay a heavy price for it, but I am ready for it.… pic.twitter.com/W7ZO2Zy6EE
— ANI (@ANI) August 7, 2025
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதை சமீப நாட்களாக அமெரிக்கா குறிவைத்துள்ளது. 140 கோடி மக்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்யவே எண்ணெய் இறக்குமதி செய்கிறோம். அதுவும், வணிக ரீதியாகவே ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்கிறது என்பதை ஏற்கனவே தெளிவுப்படுத்திவிட்டோம். இந்தியா தனது தேசிய நலன்களைப் பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும். அமெரிக்கா விவகாரத்தில் இந்தியாவும் அதே நிலைபாட்டை எடுக்கும்” எனத் தெரிவித்திருந்தார்.
August 07, 2025 12:51 PM IST


