யாழ்ப்பாணம் பகுதியை சோ்ந்த மணிமாறன் (28), மணியரசன் (24) என்பதும், இருவரும் சகோதரா்கள் என்பதும் தெரிய வந்தது. காவல் நிலையம் அழைத்துச் சென்று இவா்களிடம் விசாரணை செய்தபோது, இலங்கை பருத்தித்துறையிலிருந்து கஞ்சா கடத்த வந்ததாகவும், இலங்கைக்கு கொண்டு சென்று கொடுக்கும்போது, அங்குள்ள முகவா்கள் தங்களுக்கு ரூ.10 லட்சம் தருவதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து, நிரவி போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தினா்.

