Last Updated:
எதிர்காலத்தில் UPI பேமெண்ட்களுக்கு கட்டணங்கள் வசூல் செய்யப்படலாம் என்ற ஒரு குறிப்பை கடந்த புதன்கிழமை அன்று RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இது குறித்த விளக்கமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
UPI பேமெண்ட்கள் வாழ்நாள் முழுவதும் இலவசமானதாக இருக்காது என்ற ஒரு குறிப்பை கடந்த புதன்கிழமை அன்று RBI கவர்னர் சஞ்சய் மல்கோத்ரா தெரிவித்துள்ளார். இதன் மூலமாக இனிவரும் காலத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் பேமெண்டுகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டி இருக்கலாம் என்ற ஒரு குறிப்பு நமக்கு கிடைத்துள்ளது.
மானிட்டரி பாலிசி கமிட்டி மீட்டிங் நடைபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மல்கோத்ரா, “UPI எப்பொழுதுமே இலவசமாக கிடைக்கும் என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது. UPI டிரான்ஸாக்ஷன்களை செயல்முறைப்படுத்துவதில் ஆகக்கூடிய உண்மையான செலவுகளை யாராவது ஒருவர் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் என்பதை தான் நான் வலியுறுத்தினேன். இதில் யார் பணம் செலுத்த வேண்டும் என்பதுதான் விஷயம்” என்று கூறினார். மேலும், “UPI டிரான்ஸாக்ஷன்களுக்கான செலவை கூட்டாக செலுத்த வேண்டுமா அல்லது தனித்தனியாக செலுத்த வேண்டுமா என்பது முக்கியமல்ல. ஆனால் அதனை செலுத்தி ஆக வேண்டும்” என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் ரியல் டைம் பேமெண்ட் தொழில்நுட்பமான UPI என்பது தற்போது விசாவை விட உலக அளவில் முன்னணியில் உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் பேமெண்ட்களில் 85 சதவீதம் UPI மூலமாக நடைபெற்று இருப்பதாகவும், இது உலக அளவில் 60%ஆக இருப்பதாகவும் பன்னாட்டு நிதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் UPI விசாவை விட 640 மில்லியனுக்கும் மேற்பட்ட பணப்பரிமாற்றங்களை கையாண்டு வருகிறது. இது விசாவை விட அதிகமாக இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஜூன் 2025-ன் படி 18.39 பில்லியன் UPI டிரான்ஸாக்ஷன் நடைபெற்றதன் மூலமாக 24 லட்சம் கோடி ரூபாய் செயல்முறைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 13.88 பில்லியன் உடன் ஒப்பிடும்போது பணப்பரிமாற்ற சதவீதம் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
மல்கோத்ராவின் இந்த கமெண்ட்கள் தற்போது இலவச மாடலாக இருக்கும் UPIல் மாற்றங்களை கொண்டு வரலாம் என்பதை குறிக்கிறது. அதே சமயத்தில் ET வெல்த் ஆன்லைன் வெளியிட்ட அறிக்கையின்படி, வரக்கூடிய ஆகஸ்ட் 1, 2025 முதல் UPI டிரான்ஸாக்ஷன்களை கையாளும் பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு பிராசஸிங் செய்வதற்கான கட்டணங்களை ICICI வங்கி அறிமுகம் செய்துள்ளது. ICICI வங்கி இதனை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதி அளிக்கவில்லை என்றாலும்கூட இந்த புதிய கட்டணங்கள் குறித்து பேமெண்ட் அக்ரிகேட்டர்களுக்கு ஜூன் மாதத்தில் தெரிவிக்கப்பட்டதாக ET தரப்பில் கூறப்படுகிறது.
August 07, 2025 2:05 PM IST


