வங்கதேசத்தில் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில், நிகழாண்டு துவங்கியது முதல் டெங்கு காய்ச்சலின் பாதிப்புகள் தொடர்ந்து பதிவாகி வருகின்றன. இந்நிலையில், தற்போது புதியதாக 428 பாதிப்புகள் உறுதியாகியதன் மூலம், நிகழாண்டில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 22,812 ஆக உயர்ந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு 3 பேர் பலியாகியுள்ள நிலையில், அந்நாட்டில், 2025 ஆம் ஆண்டில் பலியானோரது எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

