Last Updated:
கிரிக்கெட் வரலாற்றில் ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் ஏபி டிவில்லியர்ஸ் சிறந்த டி20 அணியை தேர்வு செய்துள்ளார். அதில் இந்திய வீரர்கள் 7 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.
டி20 போட்டிகளில் அதிக ஆதிக்கம் செலுத்தும் அணியாக இந்தியா மாறியுள்ளது. 2008 ஆம் ஆண்டு இந்தியாவில்தான் முதன் முறையாக 20 ஓவர் லீக் போட்டி ஐபிஎல் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்த ஐபிஎல் போட்டிக்கான வரவேற்பு அதிகரித்த வண்ணமாகவே இருந்தது.
ஐபிஎல் தொடரின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் லீக், வெஸ்ட் இண்டீசில் கரிபியன் லீக் உள்ளிட்ட பல நாடுகளில் 20 ஓவர் லீக் போட்டிகள் தொடங்கப்பட்டன.
வர்த்தக ரீதியில் இந்த தொடர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஏராளமான இளம் வீரர்களுக்கும் அவர்கள் தேசிய அணியில் இடம்பிடிப்பதற்கு இந்த லீக் போட்டிகள் அதிகம் உதவின.
கிரிக்கெட் வரலாற்றில் ஐபிஎல் போட்டிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கூறியுள்ளார். இந்நிலையில் டி20 போட்டிகளில் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவராக பாராட்டப்படும் ஏபி டிவில்லியர்ஸ் உலகின் சிறந்த டி20 அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பின்வருமாறு-
ரோஹித் சர்மா, மேத்யூ ஹைடன், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஏபி டி வில்லியர்ஸ், ஹர்திக் பாண்டியா, எம்எஸ் தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஜஸ்பிரிட் பும்ரா, யுஸ்வேந்திர சாஹல், லசித் மலிங்கா, டேனியல் வெட்டோரி.
August 05, 2025 9:00 PM IST


