தூங்கி ரெஸ்ட் எடுக்க யாராவது பணம் கொடுத்தா நல்லா இருக்கும்னு வாழ்க்கைல ஒரு தடவையாவது நாம் நினைத்திருப்போம்.
அந்தக் கற்பனை தற்போது நிஜமாக்கவந்துள்ளது சிங்கப்பூர் மெத்தை நிறுவனமான Woosa, வெறுமனே தூங்கி ஓய்வெடுக்க உங்களுக்கு S$3000 வரை சம்பளமாக அது செலுத்தவுள்ளது.
மெத்தைகளில் படுத்து, ஓய்வெடுத்தால் போதும் வேற எதுவும் செய்யவேண்டாம், அந்த அதிர்ஷ்டசாலிகளுக்கு S$3,000 வரை செலுத்தப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஜூரோங் பாயிண்டிற்கு நீங்கள் சென்றிருந்தால், திறந்தவெளி பகுதியின் நடுவில் உள்ள சொகுசான படுக்கைகளில் மக்கள் ஓய்வெடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.
“ஸ்லீப்பிங் பியூட்டி பாப்-அப்” என்று சொல்லப்படும் அதனை Woosa நிறுவனம் ஏற்பாடு செய்தது, அது சன்டெக் சிட்டி மற்றும் வாட்டர்வே பாயிண்ட் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டது.
ஓய்வின் முக்கியத்துவம்
ஆடம்பரமான மெத்தைகளை காட்சிப்படுத்துவது மட்டும் அந்நிறுவனத்தின் நோக்கமில்லை, மேலும் ஓய்வின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறுவது தான் இந்த நிகழ்வின் உண்மையான நோக்கமாக சொல்லப்படுகிறது.
குறிப்பாக சொல்லப்போனால், தூக்கமின்மைக்கு பெயர் பெற்றவர்கள் சிங்கப்பூரர்கள் என்பதால் இந்த ஏற்பாடு பெரிய வரவேற்பை பெறும்.
ஆள்களை தேடும் நிறுவனம்
இந்நிலையில், ஸ்லீப்பிங் பியூட்டி நிகழ்வு மீண்டும் வரும் செப்டம்பர் 8 முதல் 14 வரை ஏற்பாடு செய்யப்படுகிறது, அதற்கான ஆள்களை அந்நிறுவனம் தேடுகிறது.
21 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இதில் கலந்துகொள்ளலாம், அவர்கள் தங்களில் தனித்துவமான தூக்கக் கதையைப் பகிர்ந்துகொள்வதுடன், அன்றாட வாழ்க்கையில் ஓய்வு எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதையும் சொல்ல வேண்டும்.
விண்ணப்பம் செய்ய கடைசி நாள்
இதற்கான விண்ணப்பங்கள் வரும் ஆகஸ்ட் 10 வரை வரவேற்கப்படும். அதன் பிறகு, தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை அந்நிறுவனம் நேரில் அழைக்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள், மெத்தையில் ஓய்வெடுக்க அழைத்துச் செல்லப்படுவார்கள், ஒவ்வொறு மெத்தையும் அவர்களின் நிஜ வாழ்க்கையை நினைவுகூரும் வகையில் அமைப்பைக் கொண்டிருக்கும்.
S$3,000 சம்பளத்துக்கு நீங்கள் தூங்கத் தயார் என்றால் உடனே விண்ணப்பியுங்கள்: விண்ணப்பம்

