Last Updated:
தொடர்ந்து ஒரு நாள் போட்டியை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 111 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் கொடுத்த கேட்சை தவறவிட்டதால் இந்திய அணியின் பவுலர் முகமது சிராஜ் கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறி உள்ளார்.
கேட்சை அவர் தவறவிட்ட போது விமர்சனங்கள் குவிந்த நிலையில், தற்போது அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூப்பர் திரில்லராக நடந்த இந்த போட்டி இரு நாட்டு அணி ரசிகர்களுக்கும் உச்சகட்ட பரபரப்பை கொடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விளையாடினர்.
நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்திருந்தது. கூடுதலாக 35 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி இன்று விளையாட தொடங்கியது. இரண்டாவது இன்னிங்ஸில் சிராஜ் இன்று மேலும் 3 விக்கெட் என 2ஆவது இன்னிங்ஸில் மொத்தம் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.
நேற்றைக்கு இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஹாரி புரூக் 19 ரன்கள் எடுத்திருந்தபோது பந்தை சிக்ஸருக்கு அடிக்க முயன்றார். அந்த கேட்ச்சை பிடித்த சிராஜ் எல்லைக்கோட்டை தாண்டி சென்றதால் வந்து சிக்ஸராக மாறியது.
தொடர்ந்து ஒரு நாள் போட்டியை போன்று ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹாரி புரூக் 111 ரன்கள் குவித்தார். இதனால் இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
August 04, 2025 6:47 PM IST


