Last Updated:
ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபு சோரன் மறைவையொட்டி மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை முடங்கியது.
இரண்டு நாட்கள் விடுமுறைக்குப் பின் மக்களவை காலை தொடங்கியது. வழக்கம் போல் கேள்வி நேரம் தொடங்கியதும் அவையை ஒத்திவைத்துவிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் தொடர்பாக விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பின. ஆனால், இதுபற்றி நேரமில்லா நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதற்கு கண்டனம் தெரிவித்த சபாநாயகர், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இது நல்லது அல்ல என்று காட்டமாகக் கூறினார். தொடர்ந்து அமளி நீடித்ததால் அவையை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.
August 04, 2025 11:40 AM IST


