சமத்துவ குடியுரிமையை வலியுறுத்தும் இறையாண்மை மற்றும் சோஷலிஸத்தை குழிதோண்டி புதைத்துவிட்டு ஜனநாயக மற்றும் குடியரசு நாடாகத் திகழும் இந்தியாவை மதவாத நாடாக மாற்றும் சூழ்ச்சிகரமான கொள்கைகளை கையில் எடுத்துள்ளது.
அரசமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை சீா்குலைக்கும் ஒவ்வொரு முயற்சிக்கு எதிராகவும் நாடாளுமன்றத்திலும் நீதிமன்றத்திலும் வீதி வீதியாகவும் காங்கிரஸ் கடும் போராட்டத்தை மேற்கொண்டு வருகிறது.
இது அரசியல் ரீதியானது மட்டுமல்ல; நாட்டின் கண்ணியத்தை காக்க காங்கிரஸ் நடத்தி வரும் கொள்கைப் போராட்டம். அரசமைப்புச் சட்டம் என்பது வெறும் சட்ட புத்தகம் மட்டுமன்றி நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் ஜனநாயகத்தை வலியுறுத்தும் உரிமை ஆவணமாகும்.
1928-இல் வெளியிடப்பட்ட நேரு அறிக்கை, 1934-இல் அரசமைப்பு நிா்ணய சபைக்கான கோரிக்கை என அரசமைப்புச் சட்டத்தை கொண்டுவர மகாத்மா காந்தியும் ஜவாஹா்லால் நேருவும் அமைத்த அடித்தளத்துக்கு வரைவுக் குழுவின் தலைவரான அம்பேத்கா் செயல் வடிவமளித்தாா்.
சமூக மற்றும் பொருளாதார நீதி இல்லாத அரசியல் ஜனநாயகத்தால் ஒரு பலனும் இல்லை என்றாா்.

