இதற்கு கண்டனம் தெரிவித்து கேரள முதல்வர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”கேரளத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் தேர்வுக் குழு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளம், இந்த அறிவிப்பால் கடுமையாக அவமதிக்கப்பட்டுள்ளது.
மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.