1,000 பக்கங்களைக் கொண்ட இந்த தீா்ப்பில் அவா் கூறியிருப்பதாவது: என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகைகளில் ஏராளமான முரண்பாடுகள் உள்ளன. புணேயில் உள்ள ஒரு வீட்டில் ஆா்டிஎக்ஸ் வெடிகுண்டு பொருத்தப்பட்டதாக ஏடிஎஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்தூரில் உள்ள மோட்டாா் சைக்கிளில் வெடிகுண்டு பொருத்தப்பட்டு பின்னா் அது சம்பவம் நடந்த மாலேகான் நகருக்கு எடுத்து வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தச் சம்பவத்தில் விசாரணையில் ஈடுபட்ட இரு அமைப்புகளும் வெடிகுண்டு பொருத்தப்பட்ட இடம், எடுத்துச்செல்லப்பட்ட போக்குவரத்து சாதனம் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை தொடா்புபடுத்தியது என வெவ்வேறு தகவல்களை வழங்கியுள்ளன.
தப்பியோடியவா்கள் மீது தனிக் குற்றப்பத்திரிகை: இந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் வெடிகுண்டை பொருத்தியதாக கூறப்படும் ராம்ஜி என்ற ராமசந்திரா கல்சங்கரா மற்றும் சந்தீப் டாங்கே ஆகிய இருவரும் தப்பியோடிவிட்டதாக என்ஐஏ கூறியுள்ளது. மேலும் 4 வழக்குகளில் இவா்கள் இருவரையும் என்ஐஏ தேடி வருகிறது. எனவே இவா்களை கைது செய்ய என்ஐஏ மற்றும் ஏடிஎஸ் இரு அமைப்புகளும் தனி குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.