நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை வழங்கப்பட்டது.
நாமல் ராஜபக்ஷ இன்று ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையானதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.
இன்று காலை மாலைதீவிலிருந்து வந்த பிறகு, அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி, ஒரு மனுவை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
நாமல் ராஜபக்ஷ திட்டமிடப்பட்ட விசாரணைக்கு முன்னிலையாகத் தவறியதை அடுத்து, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றம் நேற்று பிடியாணையைப் பிறப்பித்தது.
அப்போது நாமல் ராஜபக்ஷ ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்காக மாலைதீவில் இருப்பதாகக் கூறப்பட்டது.