மேல் மாகாணத்திலும், அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இன்று (28) முதல் GovPay மூலம் நேரடியாக அபராதம் செலுத்தும் முறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார்.
இந்த செயல்முறையை வெற்றிகரமாக்குவதற்கு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று 1000 போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு அலைபேசிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW