• Login
Saturday, August 2, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… 38 பேர் உயிரிழந்த அதிர்ச்சி!

GenevaTimes by GenevaTimes
July 28, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… 38 பேர் உயிரிழந்த அதிர்ச்சி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 28, 2025 6:43 AM IST

பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த ரத்தவெறிப்பிடித்த கொடூரத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காங்கோவில் தேவாலயத்தில் புகுந்து பயங்கரவாதிகள் சரமாரியாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது எப்படி?

கிழக்கு காங்கோவின் கொமாண்டா பகுதியில் அமைந்துள்ள தேவாலயத்தில் பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் இரவுத் திருப்பலியில் பங்கேற்றிருந்தனர். அப்போது அதிகாலை ஒரு மணியளவில் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தேவாலயத்திற்குள் நுழைந்த கிளர்ச்சியாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த பலர் துப்பாக்கி தோட்டாக்கள் பாய்ந்து சுருண்டு விழுந்தனர்.

பலர் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். ஆனால் அவர்களை துரத்திச் சென்று கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்த ரத்தவெறிப்பிடித்த கொடூரத் தாக்குதலில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பலர் காயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. மேலும், பலர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தேவாலயத்திற்கு அருகே இருந்த சில வீடுகள் மற்றும் கடைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலை ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்பு கொண்ட ADF கிளர்ச்சியாளர்கள் நடத்தியுள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து இவ்வாறு பொதுமக்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் அரசு ஆதரவு பெற்ற மத அடிப்படைவாத அமைப்பை சேர்ந்த கிளர்ச்சியாளர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் கோமண்டாவிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு கோட்டையிலிருந்து வந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் வருவதற்கு முன்பே தப்பி ஓடிவிட்டதாகவும் கூறப்படுகிறது. கிழக்கு காங்கோ, சமீபத்திய ஆண்டுகளில் ஏடிஎஃப் மற்றும் ருவாண்டா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களால் கொடிய தாக்குதல்களைச் சந்தித்து வரும் சூழலில், இந்த கொடூர தாக்குதலுக்கு பல்வேறு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

First Published :

July 28, 2025 6:42 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

காங்கோ நாட்டின் சர்ச்சில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு… 38 பேர் உயிரிழந்த அதிர்ச்சி!

Read More

Previous Post

பிரபல டிசிஎஸ் நிறுவனம் 2% ஊழியரை குறைக்க முடிவு: 12,000 பேருக்கு வேலை பறிபோகும் அபாயம் | TCS to reduce staff by 2 percent 12,000 people at risk of lay offs

Next Post

சட்டவிரோத பணக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேர் கைது | Makkal Osai

Next Post
சட்டவிரோத பணக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேர் கைது | Makkal Osai

சட்டவிரோத பணக் கடன் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக நம்பப்படும் ஐந்து பேர் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin