முன்னதாக, அக் கட்சி சாா்பில் தோ்தல் ஆணையத்திடம் கடந்த ஜனவா் 6-ஆம் தேதி இதுதொடா்பான மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘மக்களவைத் தோ்தலில் வாக்காளா்கள் மது போதைக்கு ஆளாகாமல் வாக்களிக்கும் உரிமையை நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் வாக்காளா்களுக்கு சுவாசப் பரிசோதனை கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இந்தப் பரிசோதனை அடிப்படையில், மது அருந்தாத வாக்காளா்களுக்கு மட்டுமே வாக்கைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது.

&w=1200&resize=1200,675&ssl=1)