• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

எதிர்க்கட்சிகளுக்கு தேதி குறித்த மத்திய அரசு… விவாதத்திற்கு வரும் ஆபரேஷன் சிந்தூர்; நாடாளுமன்றத்தில் பேசப்போகும் பிரதமர் மோடி?

GenevaTimes by GenevaTimes
July 25, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
எதிர்க்கட்சிகளுக்கு தேதி குறித்த மத்திய அரசு… விவாதத்திற்கு வரும் ஆபரேஷன் சிந்தூர்; நாடாளுமன்றத்தில் பேசப்போகும் பிரதமர் மோடி?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்டவற்றை குறித்து விவாதிக்க தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்து வருகின்றன.

இந்நிலையில், ஜூலை 28ஆம் தேதி மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து மத்திய அரசு தரப்பில் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவையில் 28ஆம் தேதி நடத்தப்படும் விவாதத்தில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விவாதத்தை துவங்கி வைக்கிறார். இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், நிஷிகாந்த் தூபே உள்ளிட்டோரும் பங்கேற்க இருக்கிறார்கள். இந்த விவாதத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்க இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

On Monday, 28th July, Defence Minister Rajnath Singh will initiate the discussion on Operation Sindoor in the Lok Sabha. Other ministers participating in the discussion include Home Minister Amit Shah and Foreign Minister S Jaishankar. BJP MPs Anurag Thakur and Nishikant Dubey… pic.twitter.com/RVcIJc7nHa


— ANI (@ANI) July 25, 2025

அதேபோல், 29ஆம் தேதி மாநிலங்களவையில் நடைபெறும் விவாதத்திலும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இதிலும், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

இரு அவைகளிலும் மொத்தம் 16 மணி நேரம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர், பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் பரிதாபமாக பலியாகினர். இதனை அடுத்து, இந்திய அரசு, பாகிஸ்தான் மீது ராஜாங்க ரீதியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இதனையடுத்து, பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் 9 நிலைகளைக் குறிவைத்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் பதிலடி கொடுத்தது. இந்தியாவின் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லை கிராமங்களின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனை இந்திய ராணுவம் தடுத்து நிறுத்தி பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்தது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தில், இந்திய விமானங்களும் சேதமடைந்ததாகவும், எல்லை மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை எழுப்பின. எனவே இது குறித்து விவாதிக்க, சிறப்பு நாடாளுமன்றத்தைக் கூட்டவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

இதேபோல், இரு நாடுகளின் இடையேயும் தொடர்ந்து மோதல் வெடித்தது. இதனை அமெரிக்கா தலையிட்டு நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து தெரிவித்துவருகிறார். ஆனால், இந்தியா தரப்பில் அதற்கு மறுப்பு தெரிவித்து வரப்படுகிறது.

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் துவங்கி நடைபெற்றுவரும் சூழலில், ஆபரேஷன் சிந்தூர், பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுவரும் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டுவருகின்றன. இதனால், கூட்டம் துவங்கிய கடந்த 21ஆம் தேதி முதல் தொடர்ந்து இரு அவைகளும் முடங்கி வருகின்றன.

இந்நிலையில், வரும் திங்கள் கிழமை (28ஆம் தேதி) மக்களவையிலும், 29ஆம் தேதி மாநிலங்களவையிலும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க இருப்பதாகவும், இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 25, 2025 3:59 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

எதிர்க்கட்சிகளுக்கு தேதி குறித்த மத்திய அரசு… விவாதத்திற்கு வரும் ஆபரேஷன் சிந்தூர்; நாடாளுமன்றத்தில் பேசப்போகும் பிரதமர் மோடி?

Read More

Previous Post

மாலைதீவுக்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அநுரகுமார  

Next Post

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனை

Next Post
ரிஷப் பந்த் இங்கிலாந்தில் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனை

ரிஷப் பந்த் இங்கிலாந்தில் 141 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin