Last Updated:
கம்போடியா-தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளது.
கம்போடியா- தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
தாய்லாந்து மற்றும் கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த மே மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்து கம்போடிய வீரர் ஒருவர் கொல்லப்பட்டார். இதனால் இருநாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டு தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது.
அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியா தடை விதித்தது. அதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடியது. இந்நிலையில் எல்லைப் பிரச்சனை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளது. இருநாட்டு ராணுவ வீரர்களும் துப்பாக்கி மற்றும் ராக்கெட் லாஞ்சர்களைப் பயன்படுத்தி கடும் மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் கம்போடிய ராணுவம் பதுக்கிவைத்திருந்த கண்ணிவெடி வெடித்ததில் தாய்லாந்து வீரர்கள் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கம்போடியா- தாய்லாந்து ராணுவம் இடையே எல்லைப் பிரச்சினை காரணமாக மீண்டும் மோதல் வெடித்துள்ளதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
July 24, 2025 3:04 PM IST


