இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ‘இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் துணை தலைமைத் தளபதி அமிா் பராமுடன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் புதன்கிழமை ஈடுபட்டாா். அப்போது, பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை நீண்டகால கண்ணோட்டத்தில் மேலும் வலுப்படுத்த ஒரு நிறுவனக் கட்டமைப்பை உருவாக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

