வாகன இறக்குமதியில் மீண்டும் கட்டுப்பாடுகளை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சந்தை தொடர்ந்து திறந்திருக்கும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
வாகன இறக்குமதியைக் குறைக்க மத்திய வங்கியோ அல்லது அரசாங்கமோ நடவடிக்கை எடுக்கவில்லை என்று நேற்று (22) ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் வீரசிங்க கூறினார்.
“எனக்குத் தெரிந்தவரை, அரசாங்கத்தால் அத்தகைய முடிவு எதுவும் இல்லை. எந்த மாற்றமும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் அறிக்கையை அமைச்சர் வெளியிடுவார் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
பேரண்டப் பொருளாதாரம் மற்றும் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மை தொடர்ந்து முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஆளுநர் கூறினார். மத்திய வங்கி கடன் வாங்குபவர்களின் அபாயங்களை திறம்பட நிர்வகித்து வருவதாகவும், நிதித் துறையைப் பாதுகாக்க பேரண்டப் பொருளாதார நடவடிக்கைகள் நடைமுறையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

