காலி முகத்திடலில் நடைபெற்ற கோட்டா கோ கம போராட்டத்தின் போது பொலிஸாரால் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி சட்டத்தரணி நுவான் போபகே தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவைத் தொடர உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நியாயமான காரணமின்றி போபகே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டது, அரசியலமைப்பின் கீழ் அவரது அடிப்படை உரிமைகளை மீறுவதாக மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த நீதிபதிகள் குமுதுனி விக்ரமசிங்க, சோபித ராஜகருணா மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி, உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபர், ராணுவத் தளபதி மற்றும் கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உள்ளிட்ட பெயரிடப்பட்ட பிரதிவாதிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
2022 ஆம் ஆண்டு போராட்ட இயக்கத்தின் போது செல்லுபடியாகும் சட்டப்பூர்வ அடிப்படை இல்லாமல் கைது செய்யப்பட்டதால், அது தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக அறிவிக்கும் நீதிமன்றத் தீர்ப்பை போபகே கோரியுள்ளார்.

