இதனைத் தொடர்ந்து, திருவனந்தபுரத்தில் இருந்து ஆலப்புழாவின் புன்னப்ராவில் உள்ள அவரது பூர்வீக வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை முற்பகல் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது.
அச்சுதானந்தனின் உடல் தேசிய நெடுஞ்சாலையில் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவரை காண ஆயிரக்கணக்கான மக்கள் வழிநெடுங்கிலும் குவிந்தனர்.
இரவு முழுவதும் கடும் மழையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் சாலைகளில் குவிந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனால், வெறும் 150 கிலோ மீட்டர் தொலைவை கடக்க சுமார் 22 மணிநேரம் ஆகின.
ஆலப்புழாவின் புன்னப்ராவுக்கு இன்று பிற்பகலில் தான் அச்சுதானந்தனின் உடல் வந்தடைந்தது. அவரது வீட்டில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னும் சற்றுநேரத்தில் புன்னப்ரா – வயலார் தியாகிகள் நினைவிடத்தில் அச்சுதானந்தன் உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளன.
கேரள முதல்வர் பினராயில் விஜயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டுள்ளனர்.

