Last Updated:
நீதிபதி யஷ்வந்த் வர்மா வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் விலகினார்.
வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்ட நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை, தான் விசாரணைக்கு எடுத்துக்கொள்வது சரியாக இருக்காது என்று தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கூறியுள்ளார்.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தொடர்பான வழக்கு இன்று, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதிகள் கே. வினோத் சந்திரன் மற்றும் ஜோய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா தரப்பில் இருந்து மூத்த வழக்கறிஞர்களாக கபில் சிபல், முகுல் ரோஹத்கி, ராகேஷ் திவேதி, சித்தார்த் லூத்ரா மற்றும் சித்தார்த் அகர்வால் உள்ளிட்டோர் ஆஜராகி, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சார்பாக மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், வழக்கறிஞர் கபில் சிபல், “இது சில அரசியலமைப்புச் சிக்கல்களை எழுப்புகிறது. இதை விரைவில் பட்டியலிட முடியுமா?” என்ற கோரிக்கையை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி கவாய், தான் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது என்றும், வழக்கை விசாரிக்க வேறு ஒரு அமர்வு அமைக்கப்படும் என்றும் தெரிவித்து, இந்த வழக்கில் இருந்து அவர் விலகினார்.
July 23, 2025 3:52 PM IST


