Last Updated:
புனேவில் 18 வயது ஆர்யன் வாக்மலே பள்ளி மாணவியை கத்தியால் மிரட்டியதால் பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர்.
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேயில் பள்ளி மாணவியின் கழுத்தில் கத்தியை வைத்த காதலிக்குமாறு மிரட்டல் விடுத்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் புனேவை சேர்ந்த பள்ளி மாணவியை 18 வயதான ஆர்யன் வாக்மலே கடந்த சில மாதங்களாகவே பின் தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இளைஞரின் தொல்லை தாங்க முடியாத அந்த சிறுமி அவரை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில், காதலியை வழிக்கு கொண்டு வர நினைத்த அந்த இளைஞர் கத்தியுடன் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பள்ளியிலிருந்து வீடு திரும்பும் வழியில் பிற்பகல் 3.30 மணியளவில் பசப்பா பெத்கரஞ்சே பகுதியில் சிறுமியை வழிமறித்த அந்த இளைஞர், அவரை கத்தி முனையில் மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார். இதைப் பார்த்து அதிர்ந்துபோன அப்பகுதி மக்கள் சிறுமியை விட்டு விடுமாறு இளைஞரை வலியுறுத்தயிருக்கின்றனர்.
ஆனால் ஒரு முடிவுடன் இருந்த அந்த இளைஞர் சுற்றி நின்றவர்களுக்கு அசைந்து கொடுக்காமல் அனைவருக்கும் மிரட்டல் விடுக்க ஆரம்பித்தார். அப்பகுதியிலிருந்த 2 காவலர்கள் உதவியுடன் பொதுமக்கள் பலரும் அவரை கட்டுப்படுத்த முயன்றனர். அப்போது, பின்புறமாக வந்த நபர் ஒருவர் அந்த இளைஞருக்கு தெரியாமல் பதுங்கி வந்து அவரை மடக்கிப் பிடித்தார். அதற்காகவே காத்திருந்த பொதுமக்கள் அவரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
இதில் அந்த சிறுமிக்கு சிறுமிக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஷாஹுபுரி காவல் நிலைய போலீசார் அந்த இளைஞரை பிடித்துச் சென்றனர். பிடிபட்ட இளைஞர் மீது போக்சோ உள்ளிட்ட பல்று பிரிவுகளில் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். பட்டப்பகலில் பலர் முன்னிலையில், சிறுமியின் கழுத்தில் கத்தி வைத்து இளைஞர் மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Mumbai,Maharashtra
July 22, 2025 7:14 PM IST


