Last Updated:
சூதாட்ட செயலிகளால் பண மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
ஆன்லைன் சூதாட்ட செயலி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை கூகுள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சூதாட்ட விளம்பரங்களில் பிரபலங்களை நடிக்க வைத்ததால் இதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. சூதாட்ட செயலிகளால் பண மோசடிகள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், இதுகுறித்து அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த செயலிகளை மக்களிடம் கொண்டு சேர்க்க மெட்டா மற்றும் கூகுள் நிறுவனங்கள் விளம்பரம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த நிலையில், வரும் 21ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும் படி அந்த நிறுவனங்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சமீபத்தில் ஆன்லைன் சூதாட்ட செயலி விளம்பரங்களில் நடித்த நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய் தேவரகொண்டா, யூ டியூபர்கள் மற்றும் இன்ஃப்ளூயன்சர்களுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவர்களை நடிக்க வைத்த நிறுவனங்களுக்கும் தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
July 20, 2025 7:07 AM IST


