• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம்’ – கர்நாடக அரசு அறிக்கை வெளியீடு

GenevaTimes by GenevaTimes
July 19, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம்’ – கர்நாடக அரசு அறிக்கை வெளியீடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 17, 2025 12:42 PM IST

காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

பெங்களூருவில் நடந்த சோகம்பெங்களூருவில் நடந்த சோகம்
பெங்களூருவில் நடந்த சோகம்

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடத்திய வெற்றி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம் என்று கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இந்த முறை கோப்பையை வென்றது. இதனை கொண்டாடும் விதமாக கர்நாடக தலைநகர் பெங்களூருவில் வெற்றி பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஜூன் 4-ஆம் தேதி இந்தப் பேரணி நடத்தப்பட்டபோது சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பெங்களூருவில் குவிந்துள்ளனர்.

மேலும் பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்குள் வெற்றி கொண்டாட்டங்கள் மற்றும் வீரர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, கர்நாடக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதே நேரத்தில் வெளியே கட்டுக்கடங்காத கூட்டம் ஏற்பட்டு நெரிசல் உண்டானது.

இந்த சம்பவத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர். மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட வேண்டிய இந்த ஆர்.சி.பி. அணியின் வெற்றி இறுதியில் சோகத்திலும் அதிர்ச்சியிலும் முடிந்தது. இதன் பின்னர் சம்பந்தப்பட்ட உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடுகள் அறிவிக்கப்பட்டன.

இது தொடர்பாக விசாரணை நடத்தி தற்போது கர்நாடக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

11 பேர் உயிரிழப்புக்கு காரணமான கூட்ட நெரிசலுக்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம். காவல்துறையிடம் எந்த அனுமதியும் பெறாமல் வெற்றி கொண்டாட்டத்திற்கு ஆர்.சி.பி. நிர்வாகம் அழைப்பு விடுத்திருந்தது.

வெற்றி கொண்டாட்டம் நடத்துவதாக காவல்துறைக்கு தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது. ஜூன் நான்காம் தேதி காலை 8:55 மணிக்கு வெற்றியை பெங்களூரு மக்களுடன் கொண்டாட விரும்புவதாக விராட் கோலி பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: “போயிங் 787 இன்ஜின் எரிபொருள் சுவிட்சுகளில் குளறுபடி இல்லை” – ஏர் இந்தியா தகவல்!

வெற்றி கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்கு மூன்று லட்சம் பேர் குவிந்தனர். மேலும் அன்றைய தினம் மாலை 3:14 மணிக்கு போடப்பட்ட பதிவில் மட்டுமே இலவச அனுமதி சீட்டு வழங்கப்படும் பதாக குறிப்பிட்டிருந்தனர். அதற்கு முன்பு போடப்பட்ட எந்த பதிவிலும் இது குறித்த அறிவிப்புகள் இல்லை. இதனால் கூட்ட நெரிசலுக்கு முழுக்க முழுக்க ஆர்.சி.பி. நிர்வாகமே காரணம் என்று கர்நாடக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 17, 2025 12:34 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு ஆர்.சி.பி. அணி நிர்வாகம்தான் காரணம்’ – கர்நாடக அரசு அறிக்கை வெளியீடு

Read More

Previous Post

இன்று மழை பெய்யக்கூடும்

Next Post

துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தாக்கல் செய்யுங்கள் : விமர்சகர்களிடம் அன்வார் சவால்

Next Post
துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தாக்கல் செய்யுங்கள் : விமர்சகர்களிடம் அன்வார் சவால்

துணிச்சல் இருந்தால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை தாக்கல் செய்யுங்கள் : விமர்சகர்களிடம் அன்வார் சவால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin