• Login
Monday, March 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அன்வாரிடம் இல்லை – பஹ்மி – Malaysiakini

GenevaTimes by GenevaTimes
July 18, 2025
in மலேசியா
Reading Time: 1 min read
0
மாறுபட்ட கருத்துக்களைக் கொண்ட பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திட்டம் அன்வாரிடம் இல்லை – பஹ்மி – Malaysiakini
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சில விஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களை வெளிப்படுத்திய பிகேஆர் எம்.பி.க்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் எண்ணம் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு இல்லை என்று பிகேஆர் தொடர்பு இயக்குநர் பஹ்மி பட்சில் தெரிவித்தார்.

அன்வார் மற்றும் சிலாங்கூர் பிகேஆர் தலைவர்களுக்கு இடையே இன்று மூடிய அறைக்குள் நடந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பஹ்மி, பிகேஆர் தலைவருமான அன்வார், கட்சி உறுப்பினர்களையும் கிளைத் தலைவர்களையும் மாறுபட்ட கருத்துகளுக்கு மதிப்பளித்து, கட்சியை வலுப்படுத்த ஒன்றாக முன்னேறுமாறு வலியுறுத்தியதாகக் கூறினார்.

“சில விஷயங்களில் கருத்து வேறுபாடு கொண்ட சில எம்.பி.க்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என்று பிரதமர் தெளிவாகக் கூறியுள்ளார். அவர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமை உண்டு”.

“அனைத்து கிளைத் தலைவர்களும் கட்சி உறுப்பினர்களும் இதைப் புரிந்துகொண்டு முன்னேற வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்,” என்று அவர் கூறினார்.

தகவல் தொடர்பு அமைச்சராகவும் இருக்கும் பஹ்மி, கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைத் தலைவர்கள் அந்தந்த குழு உறுப்பினர்களை நியமிக்கும்போது உள்ளடக்கிய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும் என்றும் அன்வார் அறிவுறுத்தியதாகக் கூறினார்.

“சமீபத்திய கட்சித் தேர்தல்களில் தோல்வியடைந்தவர்கள் அல்லது தங்கள் சொந்த (ஒத்த) முகாமைச் சேர்ந்தவர்கள் அல்லாதவர்கள் கூடக் கட்சியின் ஒட்டுமொத்த பலத்திற்காக ஒன்றுபட்ட அணியின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்,” என்று அவர் கூறினார்.

கூடுதலாக, மாநில தலைமைத்துவ கவுன்சில் தலைவர்களின் நியமனம் இந்த மாத இறுதிக்குள் இறுதி செய்யப்படும் என்றும், அடிமட்ட ஆதரவை அதிகரிக்க ஆகஸ்ட் மாதத்தில் களத்தில் அணிதிரட்டத் தொடங்குமாறு கட்சி இயந்திரங்களுக்கு அறிவுறுத்தியதாகவும் அன்வார் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்ததாகப் பஹ்மி கூறினார்.

கூட்டத்தின்போது, புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான சமீபத்திய குற்றச்சாட்டுகளையும் அன்வார் எடுத்துரைத்ததாகவும், இந்தச் செயல்முறை கூட்டாட்சி அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள விதிகளைக் கண்டிப்பாகக் கடைபிடிப்பதாகவும் மீண்டும் வலியுறுத்தியதாக ஃபஹ்மி கூறினார்.

யாங் டி-பெர்துவான் அகோங் மற்றும் ஆட்சியாளர்களின் மாநாட்டிற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியல் நீதித்துறை நியமன ஆணையத்தால் (Judicial Appointments Commission) தயாரிக்கப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.

“ஆட்சியாளர்கள் மாநாட்டுடன் கலந்தாலோசித்த பின்னரே பிரதமர் மன்னருக்கு ஆலோசனை வழங்கினார். இந்தச் செயல்முறை அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு முழுமையாக இணங்கியது,” என்று பஹ்மி கூறினார், முந்தைய நிர்வாகங்களைப் போலல்லாமல் எந்த நீதிபதிகளும் பணிநீக்கம் செய்யப்படவில்லை என்பதை அன்வார் தெளிவுபடுத்தினார்.

நீதித்துறை நியமனங்கள் தொடர்பாக மலேசிய வழக்கறிஞர் சங்கம் மற்றும் பெர்சே போன்ற நிறுவனங்களின் விமர்சனங்களையும் அன்வார் வரவேற்பதாகக் கூறிய பஹ்மி, நீதித்துறையின் தொடர்ச்சியான சுதந்திரமே மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

“நீதித்துறை சட்டமன்றம் அல்லது நிர்வாகக் கிளையின் குறுக்கீடுகளிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்,” என்று அவர் கூறினார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நீடித்த இன்றைய கூட்டத்தில், துணைத் தலைவர்கள் அமிருதின் ஷாரி மற்றும் ஆர். ரமணன், பிகேஆர் இளைஞர் தலைவர் கமில் அப்துல் முனிம் மற்றும் பிகேஆர் மகளிர் தலைவர் பத்லினா சிடெக் உள்ளிட்ட பல மூத்த பிகேஆர் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Like this:

Like Loading…



Read More

Previous Post

அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடுக்கிவிடப்பட வேண்டும் என்பதில் உக்ரைனுடன் உடன்படுகிறேன் – புதின் | Russia agrees with Ukraine that peace talks need to be stepped up

Next Post

Tamilmirror Online || சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Next Post
Tamilmirror Online || சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Tamilmirror Online || சந்திரசேனவின் விளக்கமறியல் நீடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin