இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இந்த ஆலோசனை வடிவம் உலகளாவிய பிரச்னைகள் மற்றும் பிராந்திய சிக்கல்கள் குறித்து மூன்று நாடுகளும் கலந்து விவாதிக்கும் இயக்கமுறையாகும்.
RIC கூட்டம் நடத்தப்படுமா, எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மூன்றுநாடுகளுக்கும் வசதியாக அமையும் முறையில் முடிவெடுக்கப்படும்.” என்று பேசியுள்ளார்.
RIC கூட்டம் நடத்துவது குறித்து இதுவரையில் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை. பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை என டெகான் ஹெரால்ட் தளம் சுட்டிக்காட்டுகிறது.

சில மாதங்களாக அமெரிக்க அரசு BRICS கூட்டமைப்புக்கு எதிராக கண்டனங்கள் முன்வைத்து வருவது அதிகரித்திருக்கிறது.

