Last Updated:
மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது.
இங்கிலாந்தின் மூன்றாம் மன்னர் சார்லஸ் இந்திய அணியுடனான சந்திப்பின் போது லார்ட்ஸ் டெஸ்டில் சிராஜ் ஆட்டமிழந்தது துரதிருஷ்டவசமானது எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஆடவர் அணி ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், இந்திய மகளிர் அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்திய வீரர்களை லண்டன் புனித ஜேம்ஸ் அரண்மனையில் மன்னர் சார்லஸ் சந்தித்து உரையாடினர்.
மன்னர் சார்லஸூடன் உரையாடியது தொடர்பாக பேசிய கேப்டன் ஷுப்மன் கில், மூன்றாவது டெஸ்டின் கடைசி நேரத்தில் சிராஜ் ஆட்டமிழந்தது துரதிருஷ்டமானது எனவும் அந்த நேரத்தில் தங்கள் மனநிலை எப்படி இருந்தது எனவும் கேள்வி எழுப்பியதாக தெரிவித்தார்.
அதற்கு லார்ட்ஸ் டெஸ்ட் முடிவு துரதிருஷ்டமானது எனவும் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவோம் என தெரிவித்ததாகவும் கில் கூறினார்.
தற்போது நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் மீதமுள்ள இரண்டு போட்டிகளையும் வெற்றிகரமாக முடிப்பதற்கு இந்திய அணி வீரர்கள் கடுமையாக பாடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஜூலை 23ஆம் தேதி புதன்கிழமை மான்செஸ்டர் நகரில் தொடங்க உள்ளது.
July 16, 2025 9:10 PM IST


