• Login
Wednesday, April 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!

GenevaTimes by GenevaTimes
July 16, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 16, 2025 3:28 PM IST

கர்நாடகா தர்மஸ்தலா கோயில் அருகே 100 பெண்கள் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தர்மஸ்தலா கோயில்தர்மஸ்தலா கோயில்
தர்மஸ்தலா கோயில்

கர்நாடகா மாநிலம் தர்மஸ்தலா கோயில் அருகே சுமார் 100 பெண்கள் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான புகார்களும் குவியத் தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் தக்ஷிண கன்னடா மாவட்டம் தர்மஸ்தலாவில் உள்ள புகழ்பெற்ற மஞ்சுநாத சாமி கோயிலின் முன்னாள் ஊழியர் ஒருவர் கடந்த ஜூலை 4 ஆம் தேதி அதிர்ச்சியூட்டும் புகார் ஒன்றை முன்வைத்தார். அதில், கடந்த 1998 முதல் 2014 ஆம் ஆண்டு வரை தர்மஸ்தாலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்களின் உடல்களை ரகசியமாக புதைக்குமாறு தன்னை கோயில் மேற்பார்வையாளர்கள் வற்புறுத்தியதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், கோயில் முன்னாள் ஊழியரை பெல்தங்காடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வாக்குமூலம் பெற்றனர்.

இதனைத்தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி, புகார்தாரர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில், நேத்ராவதி ஆற்றின் அருகே தோண்டியபோது, சில சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்ட கன்னட யூடியூபர் சமீர் என்பவர் மீது தவறான தகவல்களை பரப்பியதாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  இவ்விவகாரத்தை சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று மகளிர் ஆணையம் சார்பில் அம்மாநில முதலமைச்சருக்கு கடிதம் எழுதப்பட்டது.

இந்நிலையில், கடந்த 2003 ஆம் ஆண்டு தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற தனது மகளை காணவில்லை என்று அவரது தாய் புதிய புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், மருத்துவம் படித்து வந்த தனது மகள் தர்மஸ்தலா கோயிலுக்கு சென்ற பிறகு காணவில்லை என்றும், அது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தும் அவர்கள் வழக்கு பதிவு செய்யாமல் தன்னை மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: “பல பெண்களின் சடலங்களை புதைத்து, எரித்துள்ளேன்…” – கோவில் ஊழியர் வாக்குமூலத்தால் போலீசார் அதிர்ச்சி

மேலும், கோயில் ஊழியர்கள் தன்னை தாக்கியதில் தான் 3 மாதங்கள் கோமா நிலைக்கு சென்றதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்துள்ளார். தனது மகளின் சடலத்தையாவது கண்டெடுத்து கொடுக்குமாறும் அப்பெண் கூறியுள்ளார். இவ்விவகாரம், அம்மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு மாற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தர்மஸ்தலா கோயில் அருகே சுமார் 100 பெண்கள் வன்கொடுமை செய்து எரித்து கொலை செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பான புகார்களும் குவியத் தொடங்கி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 16, 2025 3:28 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

100 பெண்கள் பாலியல் வன்கொடுமை.. கோயில் அருகே நடந்த அதிர்ச்சி சம்பவம்.. குவியும் புகாரால் மீண்டும் பரபரப்பு!

Read More

Previous Post

அதிர்ஷ்டம் ஏற்பட கூற வேண்டிய விநாயகர் மந்திரம் | Makkal Osai

Next Post

IND vs ENG : சிராஜ் ஆட்டமிழந்தது குறித்து மனம் திறந்த கிங் சார்லஸ்.. இந்திய அணி வீரர்களுடன் உற்சாக சந்திப்பு

Next Post
IND vs ENG : சிராஜ் ஆட்டமிழந்தது குறித்து மனம் திறந்த கிங் சார்லஸ்.. இந்திய அணி வீரர்களுடன் உற்சாக சந்திப்பு

IND vs ENG : சிராஜ் ஆட்டமிழந்தது குறித்து மனம் திறந்த கிங் சார்லஸ்.. இந்திய அணி வீரர்களுடன் உற்சாக சந்திப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin