சந்திர பகவானின் சங்கடத்தை தீர்த்து அவருக்கு பாவ விமோசனம் தந்த நாளாக தான் சங்கடஹர சதுர்த்தி திகழ்கிறது.
சந்திர பகவான் விநாயகப் பெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றதால் தான் சங்கடஹர சதுர்த்தி அன்று மாலை நேரத்தில் விநாயகப் பெருமானை நாம் அனைவரும் வழிபாடு செய்கிறோம். அப்படி வழிபாடு செய்வதோடு இந்த ஒரு மந்திரத்தையும் கூறுபவர்களுக்கு எப்பேர்பட்ட தடைகளாக இருந்தாலும் அவை நீங்கி அதிர்ஷ்டம் அவர்களை தேடி வரும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.
அதிர்ஷ்டம் ஏற்பட மந்திரம் விநாயகப் பெருமானை கேலி செய்ததால் தான் சந்திர பகவானுக்கு அவருடைய அழகு முற்றிலும் நீங்கி ஒன்றும் இல்லாமல் போனார் என்றும், அவர் திரும்பவும் விநாயகப் பெருமானை வழிபட்டு அர்ச்சனை செய்ததால் தான் தேய்ந்த அவரின் முகம் வளர்ந்து முழு நிலவானார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த சங்கடஹர சதுர்த்தி நாளான இன்று நாம் ஒரே ஒரு விநாயகப் பெருமானின் மந்திரத்தை கூறும்பொழுது அந்த மந்திரத்தின் பலனால் நமக்கு இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகி நம்மை தேடி அதிர்ஷ்டமும் பணமும் வர ஆரம்பிக்கும்.
இந்த மந்திர வழிபாட்டை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தடைகளும் கிடையாது. ஒருவேளை அசைவம் சாப்பிட்டிருந்தாலும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். சுத்தமாக இருக்கும் பட்சத்தில் இந்த மந்திரத்தை பூஜையறையில் விநாயகப் பெருமானுக்கு முன்பாக அமர்ந்து கூறலாம். ஒருவேளை பெண்கள் மாதவிடாய் சமயமாக இருந்தாலும் அல்லது அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் வீட்டில் ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூறலாம்.
முழு மனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு கூற வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த மந்திரத்தை எந்த திசையை பார்த்து வேண்டுமானாலும் கூறலாம். வீட்டில் இருந்து தான் கூற வேண்டும் என்று இல்லை. அலுவலகத்தில் இருந்தாலும் கூறலாம். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியிலும் கூறலாம். முதலில் விநாயகப் பெருமானை மனதார நினைத்து என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும், தடைகள் விலக வேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு விநாயகரின் பின்வரும் இந்த ஒரு மந்திரத்தை 15 நிமிடம் மனதார கூற வேண்டும். இப்படி கூறி முடித்த பிறகு எப்பொழுதும் போல் நம்முடைய அன்றாட வேலைகளை செய்யலாம்.
மந்திரம்
“ஓம் வக்ரதுண்டாய ஹும்”
இந்த எளிமையான மந்திரத்தை முழுமனதோடு விநாயகப் பெருமானை நினைத்துக் கொண்டு யார் ஒருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு இருக்க கூடிய எப்பேர்ப்பட்ட தடைகளும் விலகும். அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்.




