இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகள் ரஷ்யா உடன் தொடர்ந்து வணிக உறவுகளைப் பேணுவதனால் இவற்றின்மீது இரண்டாம் நிலை பொருளாதார தடைகள் போடப்படும் என எச்சரித்துள்ளார் NATO பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே.
அமெரிக்க காங்கிரஸில் செனட்டர்களுடனான சந்திப்பில் இந்த மூன்று நாடுகள் ரஷ்ய அதிபர் புதினுடன் பேசி, உக்ரைன் உடனான அமைதிப்பேச்சுவார்த்தையை அவர் சீரியஸாக எடுத்துக்கொள்ளச் செய்யவேண்டும் என அவர் கூறியுள்ளார்.
“இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பெய்ஜிங் அல்லது டெல்லியில் வசிப்பவராக இருந்தால், பிரேசில் அதிபராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவவேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், இது உங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும்” எனப் பேசியுள்ளார் அவர்.

