Last Updated:
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் அமைக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில் டெல்டா மாவட்டங்களின் தடகள சாம்பியன்ஷிப் -2025 போட்டிகள் நடைபெற்றன.
ஜூலை 12-ம் தேதி இரவு தொடங்கிய போட்டி இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் 6 வயது முதல் 20 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். இந்த போட்டிகள் அனைத்தும் மாலை தொடங்கி இரவு வரை நடைபெற்றன. இரவை பகலாக்கும் வகையில் உயர் மின் கோபுரங்கள் மூலம் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டிருந்ததால் சர்வதேச போட்டிகளில் பங்கேற்பது போன்ற உணர்வை தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் பெற்றனர்.
மத்திய அரசின் கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சிந்தடிக் ஓடுதளம் மற்றும் மின்னொளி விளக்குகள் அமைக்கப்பட்டு, கடந்த மே 5-ம் தேதி திறக்கப்பட்டது. இந்த
சிந்தடிக் ஓடுதளத்தில் இதுவே முதல் என்பது குறிப்பிடத்தக்கது.
July 14, 2025 7:18 PM IST

