மேலும், நகர்ப்புற கலவரங்கள், பயங்கரவாத எதிர்ப்பு, போதைப்பொருள் தடுப்பு மற்றும் முக்கியமான பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் போன்ற சூழ்நிலைகளில் உளவுத்துறைக்கு தகவல்கள் அளிக்க இதைப் பயன்படுத்த முடியும் என்கிறார்.
இந்த மைண்ட் கண்ட்ரோலர்களை உருவாக்க முன்னதாக கரப்பான் பூச்சி, வண்டுகளைக் கட்டுப்படுத்தும் வகையில் சிங்கப்பூரில் உருவாக்கப்பட்ட சைபோர்க் மூளைக் கட்டுப்படுத்தி இன்ஸ்பிரேஷனாக அமைந்தது என்கின்றனர். ஆனால் அந்த கருவி இப்போது இருப்பதை விட 3 மடங்கு அதிக எடை கொண்டதாக இருந்துள்ளது.
பேராசிரியர் ஜாவோவின் குழு கருவியின் எடையைக் குறைத்தது மிகப் பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இதன் துல்லியத்தன்மையை அதிகரிப்பதற்காக மேலதிக ஆராய்ச்சிகள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

