Last Updated:
அமெரிக்காவின் சவுத்பே ஏல மையத்தில் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடும், செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய விண்கல்லும் ஏலத்திற்கு வரவுள்ளது.
அமெரிக்காவில் ஏல மையத்தில் ஏலம் விட வைக்கப்பட்டுள்ள டைனோசர் எலும்புக்கூடு, செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்த விண்கல் ஆகியவை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
நியூயார்க் நகரில் உள்ள சவுத்பே ஏல நிறுவனம், பல்வேறு விலை உயர்ந்த மற்றும் அரிய பொருட்களை ஏலத்துக்கு விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
அந்த வகையில், 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்ததாக கூறப்படும் சிறிய டைனோசரின் எலும்புக்கூடு ஒன்றும், சகாரா பாலைவனத்தில் கடந்த 2023ஆம் ஆண்டு செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்து விழுந்த விண்கல்லும் ஏலம் விடப்படவுள்ளன.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சவுத்பே ஏல நிறுவனத்தின் துணைத் தலைவர் கசாண்ட்ரா ஹத்தான் (Cassandra Hatton), ஏலம் விடப்படவுள்ள டைனோசர் எலும்புக்கூடு உலகில் தோன்றிய நான்கு டைனோசர்களில் ஒன்று என்றும், மீதமுள்ள மூன்று அருங்காட்சியகத்தில் உள்ளதாகவும் கூறினார்.
ஏலம் விடப்படவுள்ள செவ்வாய் கிரகத்தின் விண்கல் இதுவரை கண்டுபிடித்தவற்றிலேயே மிகப்பெரிய செவ்வாய் கிரகத்தின் கல் என்றும் கசாண்ட்ரா ஹத்தான் கூறினார்.
July 13, 2025 4:46 PM IST
ஏலத்திற்கு வரும் 15 கோடி ஆண்டுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடு… கவனம் ஈர்க்கும் அமெரிக்க ஏல நிறுவனம்


