Last Updated:
ககன்யான் திட்டத்தின் உந்துதல் அமைப்பின் சோதனை மகேந்திரகிரியில் வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான உந்துதல் அமைப்பின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
இஸ்ரோவின் கனவுத் திட்டமான ககன்யான் திட்டத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவன உந்து அமைப்பு வளாகத்தில் முக்கியமான சோதனை ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
ககன்யான் சர்விஸ் module propulsion systemத்தின் சோதனையை சுமார் 30 விநாடிகளுக்கு இஸ்ரோ வெற்றிகரமாக செய்துள்ளது. ப்ரோபல்ஷன் எனப்படும் ஊந்துதல் சிஸ்டமே விண்வெளியில் விண்கலத்தை நகர்த்துவது கட்டுப்படுத்துவது உள்ளிட்ட முக்கிய பணிகளை மேற்கொள்ளும்.
மேலும் சுற்றுப்பாதையை சரிசெய்தல், திசையை மாற்றுதல், பூமிக்கு திரும்பும் போது வேகத்தை குறைப்பது, ஏவுதலின் போது ஏதேனும் தவறு நடந்தால் அவசர காலத்தில் தப்பிப்பது உள்ளிட்டவற்றுக்கு இந்த ஊந்துதல் சிஸ்டம் தான் உதவியாக இருக்கும். இந்நிலையில் இதன் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதுககன்யான் திட்டத்தில் முக்கிய கட்டமாக கருதப்படுகிறது.
July 12, 2025 9:46 PM IST


