• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு | No plans to introduce Rs 50 coins Union Finance Ministry reply

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in வணிகம்
Reading Time: 6 mins read
0
50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை: மத்திய அரசு | No plans to introduce Rs 50 coins Union Finance Ministry reply
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: நாணயங்களை விட அன்றாட பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதையே பொதுமக்கள் விரும்புவதால், 50 ரூபாய் நாணயத்தை சந்தையில் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ‘இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கெடுப்பின்படி, தற்போது பயன்பாட்டில் உள்ள ரூ.10 மற்றும் ரூ.20 மதிப்புள்ள நாணயங்களை விடவும், ரூபாய் நோட்டுகளுக்கே பொதுமக்கள் முன்னுரிமை அளிக்கின்றனர். எனவே, 50 ரூபாய் நாணயத்தை அறிமுகப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் துறையின் பரிசீலனையில் இல்லை. இந்த கணக்கெடுப்பின்போது, எடை மற்றும் அளவு போன்றவை நாணயங்களின் பயன்பாட்டுக்கு குறிப்பிடத்தக்க தடைகளாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்வை குறைபாடு உடையோருக்கான பயன்பாட்டை எளிதாக்குவதற்காக 50 ரூபாய் நாணயங்களை வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் ரோஹித் தண்ட்ரியால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அவர், 50 ரூபாய் நோட்டுகளில் பார்வை குறைபாடு உடையோரால் அடையாளம் காணக்கூடிய அம்சங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இது குறித்து பிரமாணப் பத்திரத்தில், ‘2016 மகாத்மா காந்தி வரிசையில் உள்ள ரூ.50 நோட்டுகள் மற்றும் முந்தைய மகாத்மா காந்தி வரிசை நோட்டுகள் காரணமாக அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. மேலும், பார்வை குறைபாடு உடையோர் ரூபாய் நோட்டுகளின் மதிப்பை அடையாளம் காண உதவும் வகையில், 2020-ம் ஆண்டில் MANI என்ற மொபைல் செயலியை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது’ என்று தெரிவித்துள்ளது. இந்த வழக்கை தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் மற்றும் நீதிபதி அனிஷ் தயாள் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.



Read More

Previous Post

இரு பாலிவுட் நடிகர்களின் பூர்விக வீடுகளை மீட்டெடுக்க பாகிஸ்தான் அரசு ரூ.3.38 கோடி ஒதுக்கீடு!

Next Post

சிங்கப்பூர் சுரங்க நிறுவனத்தின் மேலாளர் சபா ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளுடன் தனது தொடர்பை மறுத்தார். – Malaysiakini

Next Post
சிங்கப்பூர் சுரங்க நிறுவனத்தின் மேலாளர் சபா ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளுடன் தனது தொடர்பை மறுத்தார். – Malaysiakini

சிங்கப்பூர் சுரங்க நிறுவனத்தின் மேலாளர் சபா ஊழல் வழக்கில் குற்றச்சாட்டுகளுடன் தனது தொடர்பை மறுத்தார். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin