சிங்கப்பூரை சிங்கப்பூரர்களின் சிறந்த வீடாக கட்டியெழுப்ப உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து பாராட்டிய உள்ளூர் ஓட்டுநர் ஒருவர் தனது நன்றியுணர்வையும் வெளிப்படுத்தினார்.
Gojek ஓட்டுநர் ஒருவர், வெளிநாட்டு ஊழியர்கள் சமூகத்துக்கு நன்றி கூறும் விதமாக, ஊழியருக்கு பானம் மற்றும் உணவுகளை வாங்கிக்கொடுத்து கௌரவப்படுத்தினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலியான சான்றிதழ்: “செக் வைத்த MOM” – 3 ஊழியர்களுக்கு சிறை
அதோடு விட்டுவிடாமல், ஜுரோங்கில் உள்ள வெளிநாட்டு ஊழியரின் தங்கும் விடுதிக்கு அவரை அழைத்து சென்றுள்ளார். இந்த சம்பவம் கடந்த ஜூன் 30 ஆம் தேதி நடந்துள்ளது.
Stomp வெளியிட்ட செய்தியில், அவரை யுஷூனிலில் இருந்து அழைத்துச் சென்று பென்ஜூரில் உள்ள அவரது தங்கும் விடுதியில் இறக்கி விட்ட்டதாகவும் Gojek ஓட்டுநர் கூறினார்.
“சிங்கப்பூரர்களான எங்களுக்கு சிங்கப்பூரை ஒரு சிறந்த வீடாகக் கட்டியெழுப்ப உதவியதற்காக அவருக்கு நன்றி தெரிவிக்கவும் பாராட்டவும் இந்த விருந்து அளிக்க முடிவு செய்தேன்” என்றும் ஓட்டுநர் கூறினார்.
அயர் ராஜா உணவு நிலையத்தில் ஊழியருக்கு பானம் வாங்கி கொடுத்துள்ளார் அவர்.
கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் கட்டுமான ஊழியராக வேலை செய்து வருவதாக வெளிநாட்டு ஊழியர் ஓட்டுநரிடம் கூறியுள்ளார்.
“தங்கள் சொந்த வீடுகளையும் குடும்பத்தினரையும் பிரிந்து வந்து சிங்கப்பூரில் வேலை செய்துவரும் வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப்பூரர்களாகிய நாம் நன்றி பாராட்டுவது முக்கியம்,” என்று அவர் கூறினார்.
“மேலும் கண்ணியம் வழங்கப்படுவதற்கும் பாராட்டப்படுவதற்கும் தகுதியானவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் என்று நான் உணர்கிறேன்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்புடைய செய்திகள்…
சிங்கப்பூரின் வளர்ச்சியில் வெளிநாட்டு ஊழியர்களின் பங்கு ஆக பெரியது – “நன்றி” சொல்ல சிறிய கொண்டாட்டம்
வெளிநாட்டு ஊழியர்களை பதாகைகளுடன் போராட தூண்டி சிக்கிய இருவர்
சிங்கப்பூர் வேலையிடத்தில் லாரி மோதி வெளிநாட்டு ஊழியர் பரிதாப மரணம்
18 வெளிநாட்டு ஊழியர்களுக்கு போலி வேலை அனுமதி (Work pass).. ஆடவருக்கு சிறை, பிரம்படி, அபராதம்

