Last Updated:
5 நாட்கள் கொண்ட டெஸ்ட் மேட்ச்சை தென்னாப்பிரிக்கா அணி 3 நாட்களுக்குள்ளாக முடித்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
இந்நிலையில் இரண்டாவது போட்டி கடந்த 6-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் புலவாயோ நகரில் தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 626 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் கேப்டன் முல்டர் 367 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஜிம்பாப்வே அணி 43 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்தது. மிகக் குறைவான ரன்கள் எடுத்ததால் ஜிம்பாப்வே அணி ஃபாலோ–ஆன் ஆனது. இதன்பின் இன்று தொடர்ந்து நடைபெற்ற 2-ஆவது இன்னிங்ஸில் 77.3 ஓவர்கள் வரை விளையாடிய ஜிம்பாப்வே அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 220 ரன்கள் மட்டுமே எடுத்து இன்னிங்ஸ் மற்றும் 236 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
July 08, 2025 10:20 PM IST


