Last Updated:
அகமதாபாத் விமான விபத்து பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்தது. நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
அகமதாபாத் விமான விபத்து குறித்து முதல்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் விமான விபத்துகள் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
ஜூன் 12ஆம் தேதி பிற்பகல் 1:39 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், சில நொடிகளிலேயே கீழே விழுந்து வெடித்ததில், அதில் பயணித்த 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். விமானம் கட்டிடங்களில் மோதி கீழே விழுந்தபோது அங்கிருந்த குடியிருப்புப் பகுதிகளில் வசித்த சிலரும் துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 270 ஆக அதிகரித்தது. நாட்டையே உலுக்கிய அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில் விபத்து குறித்து நடத்தப்பட்ட முதல்கட்ட ஆய்வுகள், விசாரணையில் கண்டறியப்பட்டவை தொடர்பான அறிக்கையை விமான விபத்துகள் விசாரணை ஆணையம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் தொடர்பான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
எனினும், விமானம் தொடர்பான தரவுகள், விமானத்தில் இருந்த ஊழியர்கள் தொடர்பான தகவல்கள், வானிலை, விமானத்தின் செயல்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமானம் விபத்துக்குள்ளானது தொடர்பான விசாரணையை மேலும் தீவிரப்படுத்தி, காரணத்தை கண்டறியும் பணியில் விமான விபத்துகள் விசாரணை ஆணையம் ஈடுபட உள்ளது. அதனைத் தொடர்ந்து இது போன்ற விபத்துகள் இனி நடக்காமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
Delhi,Delhi,Delhi
July 08, 2025 3:59 PM IST

