கடந்த காலங்களில் குற்றங்களை இழைத்தவர்களே சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட ஷானி அபேசேகரவை(Shani Abeysekera) கண்டு அஞ்சுவதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(02) நடைபெற்றது.
இதன்போது ஜே.வி.பி. தலைமையகத்தில் ஊடக சந்திப்பை நடத்திய ஷானி அபேசேகர சிஐடி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என மொட்டு கட்சி தரப்பில் முன்வைக்கப்படும் கருத்து தொடர்பில் வினப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ(nalinda jayatissa) மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.
“ இன்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரே, ஷானி அபேசேகரவின் விசாரணை நடவடிக்கைகளை முடக்கி, அவரின் தொழிற்சார் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்தனர்.
உயிரைக்கூட துச்சமெனக் கருதி செயற்படும் அதிகாரி
ஷானி அபேசேகர திறமையான அதிகாரி, எனவே, ஷானி அபேசேகர யாரென்பது மக்களுக்கு தெரியும். நாட்டுக்காக உயிரைக்கூட துச்சமெனக் கருதி செயற்படும் அதிகாரியை நாம் பாதுகாப்போம்.
குற்ற சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படும்போது தமக்கு பிரச்சினை வரும் எனக் கருதும் தரப்பினரே இப்படியான விமர்சனங்களை முன்வைக்கின்றனர். ” – என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |