Last Updated:
ஒருநாள் போட்டி போன்று விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லீட்ஸ் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதையடுத்து 2 ஆவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாம் நகரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் கே.எல். ராகுல் களமிறங்கினர்.
26 பந்துகளை எதிர்கொண்ட ராகுல் 2 ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேறினார். அடுத்து களம் புகுந்த கருண் நாயகர் 50 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஒருநாள் போட்டி போன்று விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் 107 பந்துகளில் 13 பவுண்டரியுடன் 87 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
தற்போது கேப்டன் சுப்மன் கில் மற்றும் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் ஆகியோர் களத்தில் உள்ளனர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
55 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. சுப்மன் கில் 42 ரன்களும், ரிஷப் பந்த் 15 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.
July 02, 2025 8:55 PM IST