• Login
Monday, July 7, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்

GenevaTimes by GenevaTimes
July 2, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:July 02, 2025 11:41 AM IST

கர்நாடகாவில் 20-க்கும் மேற்பட்டோர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தனர். முதல்வர் சித்தராமையா கொரோனா தடுப்பூசி சந்தேகத்தை கூறினார். மத்திய அரசு தடுப்பூசிக்கு தொடர்பில்லை என விளக்கம் அளித்தது.

கொரோனா தடுப்பூசி குறித்து சித்தராமையா  கருத்துகொரோனா தடுப்பூசி குறித்து சித்தராமையா  கருத்து
கொரோனா தடுப்பூசி குறித்து சித்தராமையா கருத்து

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 20-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தனர். இதில், இணை நோய் எதுவுமின்றி இளம் வயதினோர் ஏராளமானோர் இருந்தது பொதுமக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, திடீர் மாரடைப்புகளுக்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை புறக்கணிக்க முடியாது என்று கூறினார். திடீர் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணங்களை கண்டறிய மருத்துவர் கே.எஸ். ரவீந்திரநாத் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மரணங்களுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டு, 19 மாநிலங்களில், 18 முதல் 45 வயதுக்கு இடைப்பட்டோர் திடீரென்று உயிரிழந்தவர்கள் குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய நோய் தடுப்பு அமைப்பு இணைந்து, ஆய்வு மேற்கொண்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதில், திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவானதாக கூறப்பட்டுள்ளது.

இதே போன்று, இந்திய மருத்துவ கவுன்சிலுடன் இணைந்து டெல்லி எய்ம்ஸ் மேற்கொண்ட ஆய்வில், இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கு மாரடைப்பு காரணம் என்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், அதற்கு மரபணு மாற்றங்களே முக்கிய காரணமாக இருக்கலாம் என்று கண்டறியப்பட்ட நிலையில், ஆய்வின் இறுதி முடிவு வெளியானதும் பொதுவெளியில் சமர்ப்பிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

எனவே, இவ்விரு ஆய்வுகளின் அடிப்படையிலும் இளம் வயதில் ஏற்படும் திடீர் உயிரிழப்புகளுக்கும் கொரோனா தடுப்பூசிகளுக்கும் தொடர்பு இல்லை என்பது புரிய வருவதாக மத்திய அரசு கூறியுள்ளது. பல்வேறு விஞ்ஞானிகளும் அறிவியல் பூர்வமாக இக்கருத்தையே ஆமோதிப்பதாக மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது. அதே சமயம், மரபுணு, வாழ்வியல் மாற்றங்கள், உடனடியாக வெளியே தெரியாத உடல்நலம் சார்ந்த பிரச்னைகளால் திடீர் இறப்புகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

எனவே, திடீர் மரணங்களுக்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இன்றி கொரோனா தடுப்பூசி மீது குற்றம் சுமத்துவது, நாட்டின் சுகாதாரத்துறை மீதான நம்பகத்தன்மையை கெடுக்கும் செயல் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

July 02, 2025 11:41 AM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

ஒரே மாதத்தில் 20 மாரடைப்பு மரணங்கள்.. கோவிட் தடுப்பூசி காரணமா? முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு விளக்கம்

Read More

Previous Post

முகமது ஷமியின் முன்னாள் மனைவிக்கு மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம்

Next Post

‘இஷான் கிஷன் 200 ரன்கள் எடுத்தபோது, எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும்’: ஷிகர் தவான்

Next Post
‘இஷான் கிஷன் 200 ரன்கள் எடுத்தபோது, எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும்’: ஷிகர் தவான்

'இஷான் கிஷன் 200 ரன்கள் எடுத்தபோது, எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று எனக்குத் தெரியும்': ஷிகர் தவான்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin