Last Updated:
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடஒதுக்கீட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக இடஒதுக்கீட்டு நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. நீதிபதிகள் தவிர்த்து மற்ற பதவிகளுக்கு இட ஒதுக்கீடு முறை அமலாகியுள்ளது.
பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், இளநிலை நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் பணியிடங்களுக்கு ஜூன் 23ஆம் தேதி முதல் இட ஒதுக்கீடு அமலாகியுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., பிரிவுகளுக்கு இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தலித் பிரிவிலிருந்து உச்சநீதிமன்றத்தின் 2ஆவது தலைமை நீதிபதியான பி.ஆர்.கவாய்-இன் பதவிக்காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த இடஒதுக்கீடு நடைமுறை அமலாகி இருப்பது கவனிக்கத்தக்கது.
பல அரசு நிறுவனங்களில், உயர்நீதிமன்றங்களில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் கூடாது என நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் வினவியுள்ளார்.
சுற்றறிக்கையின்படி, எஸ்.சி. பிரிவினருக்கு 15 சதவிகிதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 7.5 சதவிகிதமும் ஒதுக்கப்படுகிறது.
Delhi,Delhi,Delhi
July 01, 2025 2:23 PM IST


