ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பிடியில் உள்ள பிணைக் கைதிகளை உடனடியாக மீட்கக் கோரி இஸ்ரேலில் பல்லாயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேலுக்குள் கடந்த அக்டோபர் மாதம் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் ஆயுதக் குழுவினர் பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 200க்கும் மேற்பட்டோரை பிணையக் கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களில் பலர் ஆறு மாதங்களாக மீட்கப்படாமல் உள்ளனர். இந்நிலையில், பிணைக் கைதிகளை உடனடியாக மீட்டு வர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இஸ்ரேலில் உள்ள முக்கிய நகரங்களில் பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர்.
தலைநகர் டெல் அவிவ் நகரில் குவிந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கண்டித்து முழுக்கங்களை எழுப்பினர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்டு வருவதற்காக ஹமாஸ் ஆயுதக் குழுவினருடன் விரைவில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…