Last Updated:
ஹைதராபாத்தில் பிரபல செய்தி வாசிப்பாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஊடகத்துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு.
ஹைதராபாத்தில் பிரபல பெண் செய்தி வாசிப்பாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள ஜவகர் நகரில் வசித்து வந்த சுவட்சா வொட்டர்கர் தெலுங்கு செய்தி நிறுவனத்தில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். பிரபல எழுத்தாளராகவும் தெலுங்கானா தனி மாநில போராட்டத்தின் தீவிர பங்கேற்பாளராகவும் செயல்பட்ட அவர், சில ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற நிலையில், தன்னுடைய மகள் மற்றும் பூர்ண சந்திர ராவ் என்பவருடன் ஜவகர் நகரில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று இரவு வீட்டின் சீலிங் ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஊடகத்துறையினரை மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கான அனுப்பி வைத்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில், சில நாட்களுக்கு முன் சுவேட்ச்சா தன்னுடைய தந்தையிடம் பூர்ணச்சந்திராவுடன் சேர்ந்து வாழ முடியாது என்று கூறியதாகவும், என்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிய பூர்ண சந்திர ராவ் இப்போது திருமண பேச்சை எடுத்தால் அது திசை திருப்பி தகராறில் ஈடுபடுவதாகவும் தெரிவித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தன்னுடைய மகளுடைய மரணம் பற்றி போலீசில் புகார் அளித்துள்ள அவருடைய தந்தை என்னுடைய மகள் தற்கொலை செய்து கொள்வதற்கு கோழை அல்ல. பூரணச்சந்திர ராவை கைது செய்து விசாரணை நடத்தினால் என்ன நடந்தது என்று தெரிய வரும்.
என்னுடைய மகளின் மரணத்திற்கு காரணம் பூரணச்சந்திர ராவ் தான். அவரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று புகார் அளித்திருக்கிறார்.
June 29, 2025 8:51 AM IST
பிரபல செய்தி வாசிப்பாளர் தற்கொலை.. “எனது மகளின் மரணத்திற்கு இவர் தான் காரணம்” சுவட்சா வொட்டர்கர் தந்தை பரபரப்பு புகார்!


